இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
தோற்றத்தில் நல்ல துணிவுடைமை, தூய்மை, அறிவு
ஆற்றல், எளிமை, அடக்கம் மிகுசான்றோன் !
அன்னவன் மீதே அவர் சென்ற உந்துவண்டி
தண்ணீரைச், சேற்றைத் தவறி இறைத்துமே—
ஆத்திரங் கொள்ளான்; அமைதியாய் நின்றிருந்தான் !
பார்த்திருந்தாள் நங்கை; அவன் பண்பிற் கடிமையாய்
ஏற்ற மணவாளன் இவ்வாய்மை யாளன்எனப்
போற்றி புகழ்ந்து புதியவனைக் கைப்பிடித்தாள் !
இல்லாதான் இல்லாளாய் ஏகினையே என்றவள் தாய்
பொல்லாச் சினங்கொண்டு பொங்கு வசைமொழிந்தாள்!
“அம்மா ! பணந்தான் அநீதியின் தோற்றுவாய்!
இம்மா நிலத்தில் எனக்குப் பொருள் வேண்டா!
செம்மையுற வாழ்வேன், சிறப்பான ஏழ்மையிலே.
99