இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
நீரோடை ஓரத்தில் நீண்ட பழங்காலக்
கூரைவீ டொன்றிற் குடியேறி, இன்பமுடன்
ஆடம் பரமின்றி, அன்பால் அகமொன்றித்
தேடரிய வாழ்வில் திளைத்தார் இருவருமே!
ஒன்றாய்ப் பணியாற்றி உள்ளதைக் கொண்டுமனம்
உந்துவண்டி ஏற்றி, முன் ஊர்சுற்றிக் காட்டியவன்
வந்திட்டான்; இங்கிருவர் வாழ்வதனைக் கண்டறிய—
தன்னை மணக்காமல் தன்போக்கில் ஏழையின்
பின்னே நடந்திட்ட பெண்ணைப் படம்பிடிக்கக்—
கந்தலுடைக் கோலம் கண்டான்; வறுமையிலும்
சிந்தை தளராமல் சிற்றெறும்பாய்ச் சுற்றிவந்தாள்
101