இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
ஓர்நாள் உழுகையிலே நற்கழனி உள்ளிருந்து
பீறிட்டு மேற்கிளம்பிப் பேரருவி போற்பாய்ந்தே
ஆறாய்ப் பெருகியதே அத்தனையும் மண்ணெண்ணெய்
துள்ளிக் குதித்தான் துணைவனவன் கள்வெறிபோல்!
உள்ளங் துணுக்குற்றாள் : 'உற்றதே தீமையினி-
ஏராளத் தங்கமும் எண்ணெய் வயல் மூலம்
சேரத் துவங்கிடுமே! தீர்ந்திடுமே இல்வாழ்க்கை!
எம்மவர் சாவாரோ? ஏனிந்தச் செல்வநிலை!
அம்மவோ, மீண்டும் அகலாக் கருப்புடையோ?'
என்று புலம்பி இதயங் குமுறுகையில் ......
131