இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
எதிர்ப்புறத்தில் சாத்தப்பட் டிருந்த தான
எழில்மிக்க கதவின்மேல் நளின மாக
அதிராமல் கைநுனியால் தட்டும் போதே
'ஆ'வென்று திறந்திடவே-உள்துழைந்தான்
சதிராடும் மயில்போன்ற மங்கை நல்லாள்-
“சரியான நேரத்தில் வந்திர்!” என்றே
புதிர்போட்டாள்; சாய்வாக அமரச் சொன்னாள்.
“புறப்பட்டு வரும்வழியில் பயணம் நன்றாய்
இனிமையுடன் இருந்ததா?” என் றார்வத் தோடும்
இன்சுவைநீர் சிற்றுண்டி தந்து கேட்டாள்!
“தனிமையினால் தவித்திருப்பீர்?” என்றாள். “என்றன்
தங்கையினி உடன்வருவாள்; அச்ச மில்லை!
அநியாயக் குறும்பிஅவள்; பேச்சுக் காரி!
அழகைப்போல் மிகுதியான அறிவும் உண்டு!
சனியனே இன்னுமென்ன வெட்கம்? உன்னைச்
சரியாகப் பார்க்கட்டும் உட்கார்!”: என்றாள்.
34