இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
புத்தரைப்போல் உயர்கொண்டை! குதியு யர்ந்த
- பொன்னிறத்துக் காற்செருப்பே உதட்டில் சாயம்!
மெத்தவிரை வாய்ச்செல்லும் வண்டி நின்றால்,
- மெதுவாக அவள்தோள்மேல் வீழ்வான்; மீள்வான் !
வித்தியாச எண்ணமின்றிச் சிறிது தூரம்
- விறுவிறுப்பாய்ப் பேசிவங்தாள் கூச்ச மின்றி
உத்தமனும் அல்லன் அவன்! உணர்வு மங்கி
- உதட்டோடும் இதழ்பொருத்தி முத்தம் ஈந்தான்!
அவ்வளவே...! 'பளிர்'என்று மின்னலைப்போல்
- அறைந்திட்டாள் கன்னத்தில் மாறி, மாறி!
செவ்வாயில் குருதிகொட்டத் திடுக்கிட்டுப்போய்ச்
- சிந்துகின்ற கண்ணிரும் துடைத்தி டாமல்'
"இவ்வளவும் உன் தமக்கை செய்த குற்றம்!
- யான் உன்னைப் பெண்பார்க்க வரவே யில்லை!
எவ்வளவோ தடுத்துரைக்க எண்ணிக் கூட
- என்பேச்சை எங்கேஉன் அக்கா கேட்டாள்?
- என்பேச்சை எங்கேஉன் அக்கா கேட்டாள்?
36