இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
மூதடுற்கு மறந்துவிட்ட குழாய்த்தண் ணீர்போல்
- மொள்ளாமல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டே
கூடுதலாய்ப் பேசுகின்றான் ஒருவன்! நல்ல
- கோமாளியா? பித்தனா? என்றேங்கி
வாடுகிறாள் தனிமையிலே உள்ளி ருக்கும்
- வனிதையவள், அண்மையிலே மணந்து வங்தாள் !
ஒடுதற்கும் வழியின்றி மறைக்கின்றானே:
- ஒருவழியுங் காணேனே!' எனத்த வித்துத்
'தவறாக...' எனப்பேச்சைத் துவக்கு தற்குள்-
- "தயவுசெய்து நீ அவ்வா றெண்ண வேண்டாம்,
சுவரா நான்? அவர்களெல்லாம் வரும்வரைக்கும்
- சுவையாகப் பாட்டொன்று பாடேன் கேட்போம்!
எவருடைய இசையரங்கும் நானில் லாமல்
- என்ஊரில் நிகழாது பைத்தி யங்தான்!
நவராத்ரிப் பொம்மைபோல் அசைய மாட்டேன்!
- நாணமென்ன? பக்கத்தில் அமர லாமே!”
- நாணமென்ன? பக்கத்தில் அமர லாமே!”
39