இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
தோள்மீது கையைப் போட்டுத்
- துடிப்புடன் முருக வேளும்
கோள்மூட்டும் தோழர் கூட்டம்
- குமைந்திட உறுதி தந்தான்!
"நாள் மட்டும் என்றே? ஆனால்
- நட்புக்கோர் எடுத்துக் காட்டாய்
ஆள்மாற்றச் சம்ம தித்தேன்;
- அறைகூவல் ஏற்பீர்!” என்றான்.
பெற்றோர்கள் பணம்அ னுப்பப்
- பிள்ளையார் பொறுப்பு ணர்ந்து
கற்றால்தான் உறுதி அன்றிக்,
- காலத்தைக் கரைத்து விட்டு,
மற்றோர்க்குப் பார மாகி
- மகிழ்பவர் நிறைய உண்டே!
சற்றேனும் எதிர்கா லத்தைச்
- சார்ந்திடின் தவறே இல்லை.
- சார்ந்திடின் தவறே இல்லை.
48