இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
அப்பாவி முருக வேளோ—
“அவளது நகைச்சு வைக்குத்
தப்பாகப் பொருள் கொள்ளாதே!
தயங்காதே கண்ணா!” என்றான்.
அப்பால் போய் மனையாள் நோக்கி
“அப்படிச் சொல்ல லாமா;
எப்போது விளையாட்டு?” என்றே
ஏகினன் அலுவ லுக்கே!
கண்ண்னோ பெயருக் கேற்ற
கண்ணியன்! அன்றோர் நாளில்
நண்ணிடும் முடிவு சற்றும்
நடைமுறைக் கியலு மாவென் (று)
எண்ணிடா உளத்த னாகி,
முருகவேள் இயம்பும் சொல்லைப்
பெண்ணிடம் பேசு கின்றான்,
47