பக்கம்:கனியமுது.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

மனைவியை மாற்றிக் கொள்ளும்
    வழக்கமும் தமிழர்க் குண்டோ?
நினைவினிற் கூட அந்த
    நெறிகெட்ட செயலே எண்ணும்
உனையொரு மனித னென்றே
    உள்வீட்டில் தங்க வைத்த
வினையினை யாரி டத்தில்
    விளம்புவேன்!” எனவ ருந்திக்


கணவனின் வருகை நோக்கிக்
    கனிமொழி காத்தி ருந்தாள். -
உணவினை இருவ ருக்கும் -
    ஒழுங்காகப் படைத்த பின்னர்;
கனவினிற் கவிதை பாடும்
    கட்டிலிற் படுத்துக் கொண்டே
மணவினை முடிந்த நாளாய்
    வழங்காத அறிவுரைத்தாள்:-

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/59&oldid=1383237" இலிருந்து மீள்விக்கப்பட்டது