இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“அன்றாடம் மாலையிலே வீடு வந்து
அரைக்கவுளி வெற்றிலையைத் தந்து செல்வான்;
இன்றளவும் ஒரு நாளும் நின்றதில்லை :
இன்னும் ஏன் வரக்காணோம், அல்லா பிச்சை?
என்றுமிலாப் புதுமையாக நேர்ந்த தென்ன ?
ஏனப்பா மரியசூசை அறிவா யாநீ ?
சென்று அவனைக் கேட்டிடுவாய்; கிடைக்காவிட்டால்,
சிறு கடையில் வாங்கிவா!“ என்றேன், போனான்.
வெற்றிலையைப் பக்குவமாய்க் கிள்ளி வந்து,
வெவ்வேறாய்த் தரம்பிரித்து, வாடிக் கைக்கு
விற்றுவரும் எளிதான வருமா னத்தில்-
வீட்டுக்குள் இருமனைவி! மாற்றி மாற்றிப்
பெற்றுவிட்ட பிள்ளைகளோ எட்டுப் பேராம் !
பெற்றோர்க்கும் தள்ளாத முதுமைக் காலம்;
வற்றாத வறுமையன்றி என்ன வாழும் ?
வாட்டத்தைப் போக்குதற்கு வழிதான் யாது?
62