இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
“ஆந்தையினைப் பழித்திட்ட கோட்டான் போல
- அவனைப் போய் நீ எள்ளி நகைத்தா யன்றோ?
மாந்தரினம் தழைப்பதுதான் முறையென் றாலும்
- வருங்காலக் குடிமக்கள் வதைய வேண்டா !
ஆய்ந்துணர்ந்து குடும்பத்தின் வருமா னத்தை
- அழகான உடல்வளத்தை-எதிர்கா லத்தின்
வேந்தராகப் பிள்ளைகளை வளர்க்கும் வாய்ப்பை-
- மேலாகக் கருதிடுவீர், என்போல்!” என்றேன்.