என்னுரை
“பூக்காடு” என்ற கவிதைத் தொகுப்பினை அடுத்துக் “கனியமுது” என்னும் இந்தப் புதிய படைப்பினைத் தொகுத்துள்ளேன். அதறகுக கிடைத்த ஆதரவும் பாராட்டும் இதற்கும் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
வழக்கமாக நான் எழுதிவரும் கதைபொதி செய்யுள் அமைப்புகளே இதிலும் இடம் பெற்றுள்ளன. எனினும் யாவுமே எண்சீர் விருத்தமாக இல்லாமல் அறுசீர் விருத்தங்களும் வெண்டளைப் பாட்டுகளும் சிற்சில விரவியுள்ளன.
என் கவிதைகளைச் சுவைத்து மகிழ்வோருள் அண்ணா இன்று இல்லை. அவரிடத்தையும் நிறைவு செய்து வரும் கலைஞர் - அவர் தானே என் உயிர் -- இதற்கு அணிந்துரை நல்கியுள்ளார். எந்த நேரத்தில் அதனை எழுதித் தந்தார் என்பதொன்றே என்பால் அவர்க்குள்ள அன்பின் ஆழத்தை எடுத்துக் காட்டும்.
சொற்களால் அவருக்கு நான் நன்றி கூறிடல் இயலுமா?
தலைப்பு ஒவியங்கள் தீட்டித் தந்த என் நண்பர் செல்லப்பன், மேலட்டையினை அலங்கரித்த அன்பர் அமுதோன், அச்சியற்றி உதவிய மனோரமா அச்சகத்து உரிமையாளராம் என் சோதரர்கள் அனைவருமே நன்றிக்குரியர்.
படித்துப் பாராட்ட வேண்டுகின்றேன்.
ஆனந்தம்
1–7–’70