பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒராயிரம் தடவையாகிலும் பகிரங்கமாகவும் ரகசிய மாகவும் எ ச் ச ரி க் ைக செய்து கொண்டார்களே? ஒருவேளை, அவர்கள் போட்ட புள்ளிக் கணக்குப் பிரகாரம் அன்றைக்கே மயிலாப்பூர் பிள்ளையானுக்கு வாழ்க்கைப்பட்டு, நான் மாலையும் கழுத்துமாக அவர்கள் முன்னிலையிலே தோன்றியிருந்தால், அவர்களுக்கு இப்படிப்பட்ட விதி எழுதிப்போட்டிருக்காதோ?-பார்வதி குமுறிக் குமுறி அழுதாள்; புலம்பினாள்!-தர்மத்தையும் சட்டத்தையும் விதியையும் மீறிக்கிட்டுச் சமூகத்திலே பேயாட்டம் போடுற வரதட்சணைக் கொடுமைக்கு நேர் முகமாக பலியாகிடப்படாதேன்னு நான் நினைச்சிருந் தேன்; ஆனா, அதே வரதட்சணைப் பிரச்னையே அப்பா வையும் அம்மாவையும் மறைமுகமாக இப்ப பலிவாங்கிக் கிட்டு இருக்கு தே? எனக்கு மட்டும் கடுகத்தனை நல்ல திர்ஷ்டம் இருந்திருந்தா, இது மட்டும் என்னைப் பெண் பார்க்க வந்த எத்தனை எத்தனையோ மாப்பிள்ளைகளிலே ஒருத்தராச்சும் எனக்காகவும் என் அன்புக்காகவும் மட்டுமே என்னைக் கலியாணம் கட்டிக்கிட சம்மதிச்சிருக்கமாட் டாரா? நெஞ்சு வெடித்துவிடவில்லைதான்! வெள்ளைப்பூனை சுற்றிச் சுற்றி வலம் வருகிறது. பெற்றவர்களின் பாதக் கமலங்களில் அடைக்கலக் காதை படித்தான் ராமையா. பார்வதி க்குச் சித்தம் பேதலிக்கப் போகிறதா, என்ன, தெய்வத்தையும் தெய்வங்களையும் சபித்தவளின் இருதயத் திலே என்னவோ சுருக்கென்று தைக்கவே, விழிப்படைந் தாள் : ஒருவேளை, நான் இப்ப, இந்த நிமிஷத்திலே அப்பாவும் அம்மாவும் கண் பார்க்க, நான் தாலியும் மாலை யுமாக கலியாணக் கோலத்திலே காட்சி தந்தால், ஒரு வேளை அவங்க ரெண்டு பேரும் ஒன்று போலவே மறுபிறவி எடுத்திடுவாங்களோ? ம ன த் தி ன் அடிவானத்தில் என்னவோ ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மின்னியது

8 121

121