பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காலங்காலமா நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்க பாருக் குட்டி, இதோ, திருமணக் கோலத்திலே அழுது துடிச்சுக் கிட்டு இருக்காளே? - கண்ணைத் திறந்து பாருங்களேன்!. அம்மா...எல் னைச் சுமந்த தெய்வமே! - உன்னோட கனவுப் பிரகாரம், நான் கல்யாணப் பெண்ணாக மாலை யும் கழுத்துமாய் நிற்கிறதையும். வெறும் பணத்துக் காகவோ, அற்பத்தனமான வரதட்சணைக்காகவோ இல்லாமல் எனக்காகவும் என்னோட துல்லியமான அன்புக் காகவும் மட்டிலுமே எனக்குத் துணை இருக்க முன் வந்த சமூகப் பிரக்ஞை கொண்ட உண்மையான ஒரு மனிதன் எனக்குத் தாலிகட்டப் போறதையும் பார்த்துப் பரமா னந்தம் அடையவாவது உங்களோட கண்கள் திறக்கப் படாதா?" அலறிஞள்; கதறிள்ை: பதறிஞள். பலன் : பூஜ்யம். ஆனாலும், திருவாளர் ஆத்மநாதனு க்கும் திருமதி ஆத்மநாதனுக்கும் இவ்வளவு வைராக்கியம், வீம்பு, ரோஷம் கூடவே கூடாது! மறுகணம் - பார்வதி வெறிமூண்டு உள்ளே பாய்ந்து, பூஜை அறைப் படங்கள் அத்தனையையும் வெளியே சுமந்து வந்தாள். "என்னை பெற்ற புண்ணிய ஆத்மாக்களோடு ந்ெஞ்சை நெகிழ்ந்து இளகச் செய்யாத எந்த ஒரு தெய்வத்துக்கும் இந்த வீட்டிலே இடம் கிடையாதாக்கும்! சத்தியக் குரல் எழுப்பிக் கொண்டே, எல்லாத் தெய்வங்களையும் அப்படியே தரையிலே போட்டு உடைத்தாள். தெய்வங்களின் குரல்கள் மண்முட்டி விண்முட்டியிருக்க வேண்டும்: . செந்தில் வியப்பு மேலிட, பாரு! அங்கிட்டுப் பாருங்க் உங்க அப்பா அம்மாவோட கண்கள் திறந்து விட்டன!" என்று கூவினான்

蚤莎

128