பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாருக்குட்டி ஆனந்தத் தாண்டவம் ஆடினள். பார்வ திக்குத் தெரியாத கூத்தா?-பெற்ற தாயையும் தந்தையை யும் உற்ற பாசத்தோடும் பரிவோடும் தொடுத்த விழிகளை எடுக்காமல் பார்த்தாள்; அவர்கள் இருவரையும் விழுங்கி விடுகிற பாவனையில் மாறிமாறியும் மாற்றிமாற்றியும் அப்படிப் பார்த்தாள். 'அம்மா!' என்று கூவினாள்? அப்பா' என்று கூப்பிட் டாள்! - நீங்க ரெண்டு பேரும் என்னை உங்க பாருக்குட்டியை மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேணும்னு காலம் காலமாக ஆசைப்பட்டிங்க... அதுக்காகவேதான், நான் இதோ மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறேன். அன்பாக எனக்காக'என்னோட பரிசுத்த மான அன்புக்காகவும் என்னை மனப்பூர்வமாகவும் சுத்த மான மனசாலேயும் நேசிச்ச பெரிய இடத்தைச் சேர்ந்த பெரிய இடத்தைச் சேர்ந்த உயர்ந்த உண்மையான ஒரு நல்ல பிள்ளையை மாப்பிள்ளையாகவும் ஏற்றுக்கிட்டேன்; இந்தாப் பாருங்களேன். அவர் என் பக்கத்திலேயே ஒற்றைக் காலிலே தவம் செஞ்சபடி நின்னுக்கிட்டிருக்காருங் களே!...பார்த்தீங்களா, அப்பா? பார்த்திட்டியா, அம்மா?" -ஆனந்தமாக ஆடினாள், கூத்தாடினாள் பார்வதி. ஆத்மநாதனும் சிவகாமியும் திறந்த கண்களை மூடாமல் அன்புத் திருமகளைப் பார்த்தார்கள்; பார்த்துக் கொண்டிருந்தார்கள்? கதிர் முத்தங்கள் இருவருக்கும் முத்தம் கொடுத்த வண்ணம் இருந்தன. செந்திலை அழைத்தாள் பார்வதி, நெருங்கி வந்தான் செந்தில். 'முகத்தில் சுரத்து இல்லாமல் என்னவோமாதிரி நிற்கி றிங்களே, செந்தில்? ஒண்னும் விசேஷம் இல்லையே?-நீங்க இப்ப இந்த எளிய வீட்டுக்கும் பணக்கார மாப்பிள்ளை, என்னோடு நல்லா ஒட்டிக்கினு நில்லுங்களேன்!" என்று குது கலத்தோடு சொல்லிக்கொண்டே, இடுப்பிலே ஒளித்து வைத் திருந்த மஞ்சள் தாலியை எடுத்துச் செந்திவிடம்

129

129