பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாந்து போட்டுடுங்க அங்கேயேதான் அப்பாவையும் அம்மாவையும் குளிப்பாட்டிச் சடங்குக் காரியமெல்லாம் கெஞ்சு அவங்க ரெண்டு பேரையும் ஜோடியாகப் பயணம் பண்ணி வைக்கனும், மறந்திடாமல், நிஜமான ஒரு அய்யர்ப் புரோகிதராகப்பார்த்து விவரம் சொல்லிடுங்க. அட்வான்ன் கேட்டா, கொடுங்க, அம்முக்குட்டி கேட்காமலே கொண் டாந்து கொடுத்த பணப்பெட்டியை அடுப்படிப் பீரோவிலே மேல் தட்டிலே வச்சிருக்கேன் :- பேசிக்கொண்டே முருகையனோடு நடந்தவள். வாசல் வெளிக்கு வந்துவிட் டதை அப்பொழுதுதான் உணரலானாள், பார்வதி. கூட்டம் குறையவில்லை. அந்தி மாலையின் வரவைப் பூமணத்தோடு அறிவித்துக் கட்டியம் கூறுகிறது. பூந்தென்றல். திசை திரும்பியவள் பூகம்ப அதிர்ச்சிக்கு ஆளானான்:அதோ, என் செந்திலோட ரோஜாப்பூ நிற "டால்ஃவின் கார் நின்னுக்கிட்டிருக்குது!...ஆ! என்னோட செந்தி லைத்தான் காணோம்!...செந்தில்! நீங்க இந்தக் காரை உங்களுக்கு உயிர்ச் சாட்சியா வச்சிட்டுப் போயிருக்கிங் களா?...நீங்களே உங்களுக்குக் கையிலே விலங்கை மாட்டிக் கிட்டு, எனக்குக் காலிலே விலங்கைப் பூட்டிப்பிட்டு, மன சறிஞ்சு ஒரு பாவத்தையும் கனவிலே கூட செஞ்சறியாத என்னை-இந்த அபலைக் கன்னியையே ஒரு பயங்கரத் தொழுவமாக ஆக்கிப்புட்டு மாயமாய்ப் பறந்திட்டீன் களே?...செநதில்! சமூகப் பிரக்ஞையோடே- வாழவழி புரியாமல்-வழிகாட்டப்படாமல் கெட்டலைஞ்சு தட்டுத் தடுமாறி விதியே சதம்னு நம்பி நம்பி உருகி உருக்குலைஞ்க சாகாமல் செத்துச் செத்துப் பிழைச்சுக்கிட்டிருக்கித என்னை மாதிரியான அபலைக் கன்னிகளுக்குச் சட்டத்துக் கும் தருமத்துக்கும் மேலான ஒரு சமூகக் கடமையைச் செய் தாக வேண்டிய ஒரு பொறுப்புள்ள சமுதாயப் பிரக்ஞை யோடவே எங்கிட்டே சீக்கிரமாகவே நீங்க திரும்பி வந்து

145

145