பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்குள் : 'பார்வதி அம்மா பார்வதி ... சத்தியம் பண்ணி டாதே ... ஆணையும் வச்சிடாதே! ' கனகசபை நீர் நிரம்பின கண்களோடு நின்ருர். அன்பும் பாசமும் இரண்டறக் கலந்தால், இப்படித் தான் தரிசனம் தருமோ ? பார்வதி, வெலவெலத்து நின்று விட்டாள்; நெஞ்சம் அழவே விழிகளும் அழுதன. மனம் அழும்போது, மனச் சாட்சி மட்டும் சிரித்துக்கொண்டிருக்குமா, என்ன ? ஆனல், அவள் சிரிக்க முயன்ருள். இல்லையென்ருல், வள்ளு வம் கோபிக்காதா ? ஆனாலும் அவளுக்குச் சிரிப்பு வர வில்லை! பார்வதி, உன் இஷ்டப்படி நீ தேர்ந்தெடுக்கிற மாப் பிள்ளையைக் கொண்டு உனக்குத் திருப்பூட்டி வைக்க வேண்டியது ஏன் பொறுப்பாக்கும்!... என்னே நம்பம்மா பார்வதி !' பாசமான அன்பின் திருப்பாதங்களில் சரண் அடைந் தாள் பார்வதி. - சுவர்க்கடிகாரம் ஒன்று அடித்தது. பிற்பகல், மணி ஒன்றரை. சாயந்தரத்திலும் பார்வதிக்குக் காப்பிதான் பிடிக்கும். சாலமன் கொடுத்தான். புதிதாகப் பிறந்த தெம்போடு காப்பியைச் சுவைத்துக் குடித்தாள் பார் வதி. அப்போது நவீனமான பெண் பிள்ளையின் பெயரில் எழுதும் நவ ரசக் காதல் கதாசிரியரான ஆண்பிள்ளை ஒருவரும், ஆணின் பெயரால் எழுதிக் குவிக்கும் பெண் எழுத்தாளி ஒருத்தி யும் மேலை நாட்டு இலக்கியத்தில் இனக் கவர்ச்சிப் புரட்சி செய்த ஆசிரியர்கள் சிலரைப் பங்குவைத்துத் துணைக்கு

器翻

34