பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரா சற்றுமுன்புதான் குளித்து முழுகி விட்டு வந்தவள் போலவே தோன்றிள்ை. பவுடர்ப் பூச்சின் க:கட்டுக்கு 'ஒச்சம் சொல்ல முடியாது. சிவப்புக் கொன்றை மரத்தடியில் கைகளைப் பிசைந்த படி நின்று கொண்டிருந்தான் செந்தில். தாராவையும் பார்வதியையும் கண்டவுடன், புதிய தெம்பு கொண்டான்; இருவரையும் வரவேற்றன். இப்போதாகிலும் அவனுக்குப் பார்வதியை அடையாளம் தெரிந்ததே!-- நல்லா இருக்கீங் களா, பார்வதி?’ என்று பார்வதியிடம் குசலம் விசாரித் தான். 'ஏதோ இருக்கேனுங்க!' என்ருள் பார்வதி. மெல்லிய பூஞ்சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொன் டாள். பிறகு, மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள். உடம்பில் பரவிய பரபரப்பைச் சமாளித்துக் கொண்டாள். இப்போது அவள் பார்வை தாராவின் திசைக்குத் திரும் பியது. தாரா, கொஞ்சம் முந்தி நீ என் கையிலே சொன்ன தாக்கல் தகவல் எல்லாம் சுத்தமான பேச்சுத்தானே?” என்று வினவினுள்.

  • சுத்தமான பேச்சு மட்டும் இல்லே, சத்தியமான நடப்பும்தான்!” என்பதாக உறுதி மொழிந்தாள் தாரா.

"சத்தியத்துக்குத் தருமம் என்கிற முதல் மரியாதையும் உண்டுண்ணு நம்புறவள் நான்!”

  • நானும் அப்படித்தான் தம்புவேன்!" *ஆல்ரைட் இப்ப நான் என்ன செய்யட்டும்? சொல்: தாரா!’

"உன் தேவ சபையிலே, நீதான் எங்களுக்கு நல்ல வழியைக் காண்பிக்க வேணும்.'

'எனக்கு உண்டான ஒரு நல்ல வழியைத் தேடிக் கண்டு பிடிக்க இன்னமும் முடியாமல் நானே திண்டாடித்

63