பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்னைப் பெற்றெடுத்தவங்களுக்கு எப்படித்தான் மங்களகர மான மனச்சாந்தியைத் தேடிக் கொடுக்கப் போறேனோ? அந்தத் துப்பு எல்லாம்வல்ல ஆண்டவனுக்குத்தான் அர்ப்பணம்' மழைக்கும் ஆசாபா சங்கள் உண்டு; கொட்டித் தீர்க் கிறது. பார்வதி நெஞ்சின் நிரடல் தீரக் கண்கனை மூடிக்கொண் டாள் - தற்காலிகமாகத்தான். நினைவில் பேயாட்டம் போடத் தொடங்குகிருள், புதிய பூலோகத்தின் புதிய ரம்பை மாதங்கி!...”சே! இவள் மாதிரியான சமுகப் புல்லுருவியெல்லாம் ஏன்தான் உயிரோடு இருக்குதுங் களோ? சே!...” கண்களைத் திறந்தாள். செந்திலைப் பற்றி மாதங்கி பேசும்போது, அவர் உன்ன்ே உசிருக்கு உசிராகவே காதலிச்சார்; அது சாமானியப்பட்ட காதல் இல்லை. முதல் காதலாக்கும்!’ என்று குறிப்பிட்டது நெஞ்சடியில் நெருஞ்சி முள்ளாகத் தைத்திருக்க வேண்டும். உள்ளே கூடத்துக்கு ஒடித் திரும்பினாள். எதிர் வரிசையில் ஜெய் வேதாளம் பங்களாவில் காலத்தின் சத்தம் பத்துமுறை கேட்டது. - அதுவரையிலும் அவளுக்கு வந்திருந்த காதற் கடிதங் கள் அத்தனையையும் ஒரே குவியலாகக் கொட்டிய பின், அவை ஒவ்வொன்றையும் இப்போது தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு அனுசரணையோடும் அனுதாபத் தோடும் மறுபரிசீலனை செய்யத் தொடங்கினாள். புத்தக அலமாரியில் இடைச் செருகலாகத் தென்பட்டது. புதிய கடிதs ஒன்று. உரிய நேரத்தில் வந்த அக்கடிதத்தை அப்பா உரிய நேரத்தில் என்னிடம் சேர்ப்பிக்க மறந்து, கடிதங்களோடு

& 5

85