பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிக்கடி சந்திச்சுக்கிணுதான் இருக்கேன். மனித சமுதா யத்தை சோதிச்சுக்கிட்டு இருக்கிற புல்லுருவிங்களாட்டம், எழுத்துச் சமுதாயத்தைப் பாழ்படுத்தி இன்னமும்கூட கெடுத்துக்கிட்டு இருக்கக்கூடிய எழுத்தாளர் எழுத்தாளிங்க ஒரு அஞ்சாறு பேர்வழிங்களைப் பத்தி முந்தி ஒரு பத்திரிகை யிலே அப்பா தொடர்ச்சியாக எழுதின இலக்கிய விமர் சனத்தை என்னாலே எப்பவுமே மறக்கமுடியாதுங்க, தம்பி. அதையெல்லாம் புஸ்தகமாகப் போட்டால், இன்றையக் காலக் கட்டத்திலே தமிழிலே படைப்பிலக்கியம் எங்கே போய்க்கிட்டு இருந்திச்சு என்கிறதை நாளைய இளைய தலைமுறை புரிஞ்சுக்கிடுறத்துக்கு ரொம்ப ஒத்தாசையாக இருக்குமே?”

  • வாஸ் தவந்தாங்க, அக்கா, அந்த விமர்சனத்தை இப்போ இருக்கிற பதிப்பகத்துக் காரங்க யாரும் துணிஞ்சு வெளியிட மனந்துணிய மாட்டாங்க; அதனாலே,

அதை நாங்களே வெளியிடப் போருேம்: பார்வதி ஆத்மார்த்தமாக மகிழ்ந்தாள். “உங்க ஊர்ப் பக்கத்திலே காப்பித்துரள் வியாபாரத்திலே கலப்படம் செஞ்சு சமூகத்தை ஏமாற்றிக்கிட்டிருந்த இரண்டொரு திடீர்ப் பணக்காரங்க இப்ப திடீர்க் குற்றவாளிகளாகிக் கம்பி எண்ணிக்கிணு இருக்கிற நடப்பைக் காலம்பற பேப்ப ரிலே போட்டிருந்திச்சே, பார்த்திருப்பீங்களே, தம்பி?" என்று கேட்டாள். 'ஊம்' என்று தலையை ஆட்டினான் மணி. சமுதாயத் துக்கு மத்தியிலே பெரிய மனுஷங்க என்கிற போலி வேஷத் திலே திரை மறைவிலே இருந்துக்கிட்டுச் சொந்த ஆகாயத் துக்காகச் சமூகக் குற்றங்களைச் செய்யத் துணிகிற சமுதாயத் துரோகிங்களோட முடிவு இப்படித்தான் ஆகு முங்க இப்படித்தான் ஆகவும் வேணுமுங்க, அக்கா!'ள் என்றன். சமூகத்தை உருவாக்கிற தனி மனிதர்க செய்கிற தப்புக்கெல்லாம் மனிதர்களை உருவாக்கிற சமூகம்

88

88