ஒரு தாய்க்கு ஒரு பிள்ளே f7?
ஒருமைந்தன் தன்குலத்துக்கு
உள்ளான்என் பதும்.உணரான்; தருமம்தன் வழிச்செல்கை
கடன்என்று தன்மைந்தன் மருமந்தன் தேர்ஆழி
உறஊர்ந்தான்; மனுவேந்தன் அருமந்த அரசாட்சி
அரிதோமற்று எளிதோத்ான்?
அவன் ஒரு பிள்ளை என்பதை எடுத்தவுடனே சொல்கிறார். அப்படியிருந்தும் அதனை ஒ ராம ல் அவன்மேல் மனுவேந்தன் தன் தேரை விட்டான் என்று சொல்லுவதில், அவ் வேந்தனுடைய நீதி முறையின் சிறப்புப் புலப்படுகிறது. அவன் அரு மந்த மைந்தன்தான், ஒரே பிள்ளையாகையால்; ஆனல் அவனைக்காட்டிலும் அருமையானது தருமம். தன் மகனை அழிக்கலாம்; தருமத்தை அழிக்கக்கூடாது. அவன் தேர்க்காலில் ஊர்ந்தவன் சொந்தப் பிள்ளை என்று சொன்னுல் போதாது; அவனுக்கு ஒரே பிள்ளை என்று சொன்னலும் போதாது; அந்தக் குலத்துக்கே ஒரு பிள்ளை என்று சொல்லி, அவனையும் தியாகம் செய்யத் துணிந்தான் மனு வேந்தன் என்று புலப்படுத்துகிறார் சேக்கிழார்.
女
திருவிளையாடற் புராணத்திலும் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஒருத்தன் வருகிருன். சோம சுந்தரக் கடவுள் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல் களில் மாமனுக வந்து வழக்குரைத்தது.ஒன்று. தன பதி_என்ற வணிகர் தலைவன் தன்-தங்கையின்
12 .