பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கன்பூசியஸின்


வாழ்க்கையைப் பற்றியே மக்கள் இன்றுவரை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பிறகு எப்படி இவர்கள் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள்?

எந்தக் காரியத்தையும் செய்ய முற்படும்போது; அதைச் செய்வதால் ஏற்படக் கூடிய முடிவை முன் கூட்டியே சிந்தித்துப் பார்த்த பிறகு அதைச் செய்திட்டால் உறுதியாக வருந்தக்தக்க முடிவு எதுவும் அமையாது

நமக்குக் கிடைக்கவில்லையே-பதவிகள் என்று கவலைப்படாதீர்கள்; ஆனால், அவை ஒருநாள் நம்மைத் தேடி வரக்கூடும் என்ற முடிவில் உங்களையே நீங்கள் தகுதியுடைய செயல் அல்லது தொண்டு வைரமாக மாறுங்கள்.

நீங்கள்தான் பலமுளளவர்கள் என்று எண்ணி விடாதீர்கள்; உங்களை விட ஒரு பலசாலி இருக்கிறான் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

பகலில் வெளியே பகட்டு; தோற்றத்தில் அமைதி மனதில் பலவீனமான சிந்தனை. அறியாமை கொண்டு வாழ்பவன்; இரவில் சுவர் பொந்துகளின் துவாரத்தின் வழியுள்ளே நுழையும் திருடனே!

பேசும் வார்த்தை நயங்களைக் கேட்டு ஒருவனை மதிப்பிடாதே. பண்பட்ட உலகில், பண்பட்ட மனித நெறியினைப் பார்க்கும் நாம், பண்படாத உலகில் வெறும் பகட்டானப் பேச்சுக்களை மட்டும்தான் பார்க்க இயலும்!

படிக்காதவர்களிடமும், பாவையர்களிடமும் பழகுவது மிகவும் கடினமான காரியம்தான்! என்ன செய்வது? இவர்களிடம் நெருங்கிப் பழக முற்பட்டால் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்களே! புறக்கணித்தாலும் அவர்கள் அதை விரும்பமாட்டார்களே!

நன்மை செய்பவர்களுக்கு நாம் நன்மையே செய்ய வேண்டும்; அதனால், மக்கள் நன்மையைச் செய்ய நாம் பழக்குகிறோம் என்று பொருள்.