பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கன்பூசியஸின்

அவற்றிலே இருந்து எப்போதும் தப்பித்துக் கொள்ளவே முயல்வார்கள்.

ஆனால் அதே மக்களிடம், சீலம், நேர்மை, ஆகியற்றால் அவர்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தப்படும் என்றால் அதனால் தங்களையே திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உண்டாகி விடுகிறது.

எனவே, ஒருவன் தனது அறிவின் ஒளியைப் பயன்படுத்தவும், பொருள்களின் தன்மையை உட்புகுந்து நோக்கவும், ஒவ்வொரு மனிதனும் முயல வேண்டும்.

தன்னைப் பண்படுத்திப் பக்குவமடைவதற்கும், தன் குடும்பம், தன் வட்டாரம் முதலியன சிறப்படைவதற்கும், ஒவ்வொருவனும் கடினமாகப் பணியாற்றிட வேண்டும். இதன் வாயிலாக ஓர் உலகப் பொது ஒழுங்கை உருவாக்குவதில் அவன் பங்கு கொள்கிறவன் ஆவான்.

அன்பு, அருள், நேர்மை இந்த மூன்றும் ஒரு தனி மனிதனின் உள்ளத்தில் பதிந்து இருந்தால், அந்த தத்துவ ஒளிகள் அவனது செயல்களில் நிச்சயமாக எதிரொலிக்கும்! அப்படிப்பட்டவர்கள் நிறைந்த ஒரு குடும்பத்தில் அமைதியும், திருப்தியும் நிறைந்திருக்கும்.

வீடுதோறும் இந்த நினைவு நில இயற்கையோடு இருந்தால், நாடுதோறும் ஓர் ஒழுங்குமுறை இருக்கும். நாடுதோறும் ஓர் ஒழுங்குமுறை படர்ந்தால் உலகமெங்கும் அமைதியும், ஆனந்தமும் ஏற்படும்-எக்களிக்கும்.

அப்போது, வானகமும், வையகமும் ஓர் ஒழுங்கில் இயங்கி, ஒவ்வொரு மனிதனும் இயற்கையோடு இயைந்து இன்பம் பெறுவான், என்று மகான் கன்பூசியஸ் தனது ஞான மார்க்கச் சிந்தனையிலே தெளிவுபடுத்தியுள்ளார்.