பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்


கி.மு. 479-ம் ஆண்டு, உலகத்தின் பெரும்தத்துவ ஞானியான மகான் கன்பூசியஸ், தனது 73-ம் வயதில் உயிர்துறந்தார். அவரது மரணப் படுக்கை அருகே அவரது ஒரு பெயரன் மட்டுமே அமர்ந்திருந்தான். வேறு யாரும் இல்லை!

'நான் பிறந்த இந்த உலகில் எதையும் சாதிக்காமல் இந்த உலகை விட்டுப் போவது என்க்குப் பெருத்த அவமானம்! இதற்காக வருங்கால மக்கள் என்னைத் தூற்றாமல் இருக்க வேண்டுமே' என்று வருத்தம் தழுவிய ஏக்க இழுப்போடு, தனது பெயரக் குழந்தையிடம் கூறிய கடைசி வாசகம் இதுதானோ..!

எந்த அறிவுள்ள அரசனும், என்னை ஆசானாக ஏற்றுக்கொள்ள எழுந்து வரவில்லை! நான் மரணத்தை அணைத்துக் கொண்டே காலமாகிறேன் வானகமாகிறேன்.

ஞானமகான் கன்பூசியஸ் உடலும் 'லூ' பட்டினத்தின் 'சே'நதியின் கரையிலே அடக்கம் செய்யப்பட்டது. அவரது ஞானத்தால் வளம்பெற்ற மாணவப் பயிர்கள் எல்லாம் இவருடைய கல்றை அருகே மூன்றாண்டுகள் வரைக் கண்ணீர் சிந்தினார்கள்.

எந்த மாணவனைப் பார்த்து தனது மரண சங்கீதத்தை இசைத்தாரோ, அந்த மாணவனான, 'ட்சே குங்' மட்டும் தனது ஞானப் பெருமான் கல்லறை அருகே ஆறாண்டுக் காலம் குரு பக்தி விசுவாசப் பயிராக வளைந்து, வணங்கி, வளர்ந்து மறைந்தான்!

எனது பேனா முனையால் உலகத்தையே மாற்றியமைப்பேன் என்று சூளுரைத்த பேனாவீரர் வால்டேர், கன்பூசியஸ் என்ற பேரறிவாளனைச் 'சீனாவின் முடி சூடா மன்னர்' என்று போற்றியுள்ளார்.

மனிதன் மகிழ்ச்சியோடும், நெறியோடும் வாழ்வது எப்படி எனபதைக் கன்பூசியஸ் என்ற ஞானியைப்போல அழகாகவும், தெளிவாகவும் மக்களுக்கு எடுத்துக் கூறியவர் வேறு எவருமில்லை. என்றார்!

மனித இனத்திற்குப் பயன்படும் முறையில் அறநெறி வழிகளை விளக்கி, தனி மனிதனுக்காகவும், பொதுமனிதச் சமுதாயத்திற்காகவும் சிந்தித்து அரும்பாடுபட்டவர் இவரை விட வேறு யாருமே இல்லை என்று அறிவு முரசு கொட்டலாம் என்று கூறியவர் வால்டேர்! வாழ்க கன்பூசியஸ் வளர்க கன்பூசியனிசம்!