பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

45


“இது ஒரு பிரமாதமா! நாளை மாலை சாரதா, கருப்பையாவின் தோளைப் பிடித்திழுத்து முத்தமிடும் காட்சியை நீங்கள் போட்டோ எடுக்கலாம். அந்தக் காட்சியை நான் டைரக்டு செய்கிறேன்” என்றாள் கோகிலம்.

சிங்காரவேலன் முகம் சற்று சுளித்தது. கோகிலம் சிரித்துக்கொண்டே, “ஏன் அண்ணா, உமக்கும் சாரதா மீது...” என்று கேலி செய்தாள்.

“தூ! தூ! நான் பெண்கள்மீது ஆசை வைப்பதைவிட்டு வருஷங்களாகிவிட்டன” என்றான் வேலன்.

“சரி! நான் நமது சினிமா காட்சிக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு கோகிலம் கருப்பையாவைத் தேடிக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றாள்.

“கருப்பையா! நாளைக்கு நாங்கள் ஊருக்குப் போகிறோம்” என்று சம்பாஷணையைத் துவக்கினாள்.

“ஏனம்மா எங்கள் ஊர் பிடிக்கவில்லையோ?” என்று கருப்பையா கேட்டான்.

“பிடிக்கவில்லையா சரிதான் ரொம்ப அதிகமாகப் பிடித்துவிட்டது. இன்னும் கொஞ்சம் போனால் என் அண்ணனுக்குப் பித்தம் பிடித்துவிடும்போல் இருக்கிறது” என்றாள் கோகிலம்.

“நீங்கள் சொல்வது எனக்கொன்றும் விளங்கவில்லையே” என்றான் கருப்பையா.

“கருப்பையா, நீ எங்கும் வெளியே சொல்லக்கூடாது, மிக ரகசியம். வெளியே தெரிந்தால் தலை போய்விடும்” என்றாள் கோகிலம்.

“என்ன இரகசியம்?” என்று கேட்டான் கருப்பையா.

கோகிலம், அவன் காதில் ‘குசுகுசு’வென ஏதோ கூறினாள். கருப்பையாவின் கண்களில் தீப்பொறி பறந்தது.

“அதனால்தான் கருப்பையா, வம்பு வளருவதற்குள் நாங்கள் போய்விடுகிறோம். அவளோ பாவம், கிழவனின் மனைவி. என் அண்ணனோ, மகா ஷோக் பேர்வழி.