பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காகிதம் எழுதுகிற மாதிரியைப் பாருங்கள் 13 ருத்தங்களிலும் பொருந்துகின்றன. ஸ்ரீநிவாசனும் லட்சு மியும் கலந்துவாழ மனுஷ்ய யத்தனமும் வேண்டுமோ? இனி மேல் நடக்கவேண்டிய காரியமனைத்தும் தங்களதே. காற் றில்லாமல் மரத்திலைகள் ஆடுவதுமுண்டோ ? தங்களுடைய சம்பந்தி ம--m - ஸ்ரீ மாமா ராம சுவாமி சாஸ்திரிகளவர்களுடைய அபிப்ராயத்தை அறிந்த தன்பேரில் அவர்களுக்கே நேரே எழுதுகிறேன். அம்மான் சேய் ஆயிசுமுழுவதும் * அம்மான் சேயாகவே யிருக்க வேண்டியதைப்பற்றி விசனப்படாமல் நான் தேற்றினேன் என்று சொல்லவும். வேணும் அனேக நமஸ்காரம் முத்துஸ்வாமி.. இக்கடிதத்தைப் படித்தவுடன் கிருஷ்ணய்யர் 'முத்துஸ்வாமி நிரம்பப் படித்தவன். காகிதம் எழுது கிற மாதிரியைப் பாருங்கள். சுருக்கமாய் உபமான உபமேயங்களோடு, தான் ஒன்றும் மேலே போட்டுக் கொள்ளக்கூடாதாம்' என சாஸ்திரிகளும் சந்தோஷத் தால் முகமலர்ந்து நன்றாயிருக்கிறது' என்றார். பிறகு சிறிதுநேரம் பேசிவிட்டு இருவருமாய் சிறுகுளத்திற்கு அன்று பகலிலேயே போய் முகூர்த்தம் வைத்துக் கொண்டு வருவதாய்த் தீர்மானம் செய்தார்கள். மறுநாள் காலையில் சிறுகுளம் என்ற கிராமத்தில் ஆற்றங்கரையில் சில ஸ்திரீகள் புடவை தோய்த்துக் கொண்டும் ஸ்நானம் செய்துகொண்டும் இருந்தார்கள். அவர்களுள் ஒருத்தி + 'ஆமாம், எல்லாம் "காரியமாகிற * பைத்தியக்காரன் என்ற அர்த்தத்தில். இந்தப் பரதேவதைக்கு ரகரம் வாயில் நுழையாது : அதற்குப் பதிலாக யகரந்தான் வரும். முதலிலேயே அந்த பரிபாஷையைத் துவக்கினால் உலகம் பயந்துபோகும் என்று அதற்கு உதாரணம் பின் அத்தியாயங்களில் மட்டும் கொடுக் கப்பட்டிருக்கிறது.