பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so கம்பனில் மக்கள் குரல் என்று இராகவன் கூறியதைக் கேட்டு அநுமனும் கணையாழி யைக் கைக் கொண்டு தந்தை வேகமும் தனது நாயகனது தனிச்சிலையினின்று புறப்படும் அம்பின் வேகமும், தனது மஞேவேகமும் பின்னிடும்படி விரைவாகச் சென்று, இராமன் வருகையை வழிமீது விழிவைத்துக் காத்திருந்த குகப்பெருமானுக்குச் சேயோன் வந்த வாசகத்தைக்கூறி வான்வழிச் செல்லுகின்ருன். பதினன்கு ஆண்டுகள் முடிந்தும் இராமன் வரவில்லையே என்று தீ மூட்டி அதில் விழுவதற்குத் தயாராக இருந்த பரதன் முன் குன்றுபோல் நெடுமாருதி சென்று. ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் மெய்யின் மெய்யன்ன நின்றுயிர் வீட்டில்ை உய்யு மேயவன் என்றுரைத் துட்புகாக் கையி குல்னரி யைக்கரி யாக்கினுன்." (வீட்டினுல்-ஒழிந்தால்) 'தலைவனை இராமன் வந்தான்; பெரியோன் வந்தான். உண்மை தவறுத உன் உயிர் ஒழிந்தால் இராமன் உயிர் வாழ்வான?’ என்று உரைத்து கூடிய கூட்டத்துட் புகுந்து நெருப்பைப் பிசைந்து அவித்துக் கரியாக்குகிருன். இங்ங்ண்ம் மாருதி உற்ற சமயத்தில் வந்து எரியை அவியா திருப்பின் பரதனின் நிலை யாதாயிருக்கும்! இறந்து போயிருப்பாணன்ருே? இதனைக் கண்ணுலும் இராமன் முதலிய அனைவரும் அத்துயர் தாங்காது பரதன் வழி யையே பின் பற்றியிருப்பர். அவ்வித முடிவு ஏற்படுமாயின் இராமசரிதமும் வேறு விதமாயிருக்கும். இராகவன் புகழும் இனித்திராது. இவ்வாறு புகழ்மனக்கும் இராமகாதையின் இடையே புகுந்த மூன்று கோணல்களையும் நிமிர்த்திச் செப்பஞ் செய்த பெருமை அதுமனைச் சார்ந்துள்ளதனுல், கவிக்கு 9. புத்த மீட்சி-248