பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கம்பனில் மக்கள் குரல் எல்லையில் மறைக ளாலும் இயம்பரும் பொருளி தென்னத் தொல்லையில் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்த தன்றே" (எல்லை இல் அளவிட முடியாத; தொல்லையில். ஆதியில்; சூழ்ச்சி ஆராய்ச்சி, பரந்தது . பரவி இருந்தது! இது வெள்ளம் பரவுவதைக் கூறும் பாடல். பரம் பொருள் ஒன்றேயாயிருப்பது போல சரயு வெள்ளமும் ஒன்று; பல சமயத்தினர் பரம்பொருளைப் பலபடியாகச் சொல்லுகின்றனர். அங்ஙனமே வெள்ளம் ஏரி, தடாகம் முதலிய இடங்களில் பல பெயர்களைப் பெறுகின்றது. இதில் அமைந்துள்ள பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருள்' என்பதில் மரபு வழிபட்ட உருக்காட்சி அமைந் துள்ளது; (வெள்ளம்) புலர்ந்தது என்பதில் இயக்கப்புல உருக்காட்சியும் பொருந்தியுள்ளது. தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஒதிய உடம்பு தோறும் உயிரென உலாவ தன்றே: 85. டிெ -19 26, , , 20