பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6% கம்பனில் மக்கள் குரல் தையும், அங்குத் தாடகை இராமனது அம்பால் பட்டதை யும், சுபாகு விண்ணுலகடந்ததைபும், மாரீசன் மறைந்து சென்றதையும் உணர்த்துகின்ருர். தவமகிமையால் தான் பெற்ற படைக் கலங்களையெல்லாம் தான் இராமனுக்கு சந்ததையும் குறிப்பிடுகின்ருர். இவ்வாறு கூறியவர், அலையுருவக் கடலுருத் (து) ஆண்டகைதன் நீண்டு) உயர்ந்த கிலேயுருவப் புயவலியை நீயுருவ நோக்கையா!' என்று கூறி, இராமனது கைவண்ணத்தை ஆராய்ந்து பார்க்கும்படி கேட்கின்ருர், அத்துடன் விட்டாரா? கோதமன்றன் பன்னிக்கு முன்னைஉருக் கொடுத்த(து) இவன் போது கின்ற(து) எனப் பொலிந்த பொலன் கழற்கால் பொடிகண்டாய் ! |பன்னி.பத்தினி; முன்னே உரு. பழைய வடிவம்; கழற்கால் பொடி-திருவடியின் துரளி) என்று இராமனது கால்வண்ணத்தையும் உணர்த்துகின்ருர். சிவதனுசைக் கன்யாசுல்கமாக வைத்திருக்கும் வர லாற்றை இராமனுக்கு சனகன் கூறுகின்றன். பிறகு அவன் கட்டளைப்படி அறுபதியிைரம் வீரர்கள் அவ்வில்லைச் சுமந்து கொண்டு வருகின்றனர். சதாநந்த முனிவர் அந்த வில் சனகனிடம் வந்த வரலாற்றை உணர்த்தி சிதை தோன்றிய விவரங்களேயும் தருகின்ருர். சீதையின் பேரழ. கைக் கண்டு பல மன்னர்கள் வந்து மணம் பேசியதையும், அதற்கு மறுமொழியாக சிவதனுசை வளைத்து நாணேற்று 3. குலமுறை-26 9. டிெ-29