பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 67 சீதையும் ஒருவரையொருவர் பார்ப்பதற்குக் கூட்டிவைக் கின்றது. இராமனது பெருமையை விசுவாமித் திரரால் அறிந்த சதாநந்தர், விசுவாமித்திரடைய பெருமைகளை யெல்லாம் இராமனுக்கு உணர்த்துகின்ருர். இதுவும் விதி யின் செயலே. அவற்றைக் கேட்ட இராமனுக்கு முனிவ ரிடம் பெரும் பக்தி ஏற்படுகின்றது. சனகன் விசுவாமித்திர ருடன் வந்த அரசிளங்குமாரர்களைப் பார்க்கும்பொழுது இராமனது அழகில் ஈடுபடுவதும் ஊழின் வலிதான் என்று சொல்லவேண்டும். இங்ங்னம் பல அறிமுகங்களின் விளை வாக மானிடப் பிறவியில் சீதையும் இராமனும் அறிமுகம் ஆகி ஒன்று சேர்கின்றனர்.