அ. ச. ஞானசம்பந்தன் + 217 நினைப்பது தவறு; அது எங்கும், எப்பொழுதும், நீக்கம் அற நிறைந்து நிற்பது என்பதைத்தான் கூற வருகிறான். இதே கருத்தைப் பிரகலாதன் கூற்றாகப் பின்னரும் பேசுகிறான்: உலகு தந்தானும், பல்வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று உலைவு இலா உயிர்கள் தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் மலரினில் வெறியும், எள்ளில் எண்ணெயும். இரணியன் வதைப்படலம் - 120) என்கணால் காண்டற்கு எங்கணும் உளன்காண் நின் கணால் நோக்கிக் காண்டற்கு எளியனோ? இரணியன் வதைப்படலம் - 12) தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம் சான்று அவன்....................... ( – 122) (உலகைப் படைத்தவனும் (பருப்பொருள்கட்குக் குறியீடு), உயிர்களைப் படைத்தவனும் (நுண்பொருள் கட்குக் குறியீடு), என்றும் உள்ளதாகிய உயிர்கள்தோறும் உயிருக்குயிராய் உள்ளே உறைபவனும் ஆன அவன், மலருள் வாசனையும், எள்ளுள் எண்ணெயும் போல உள்ளான். என்னால் அவனைக் காண முடியும் - உன்னால் காண முடியாது. உலகிலுள்ள பொருள்கட்கு எல்லாம் தோற்றம், வாழ்வு, முடிவு என்பன உண்டு! இவை நடைபெற அவற்றுக்கெல்லாம் சான்றாக நிற்பவன்.) மலரில் மணம் மலர்ந்து வெளிப்படுமுன் எங்கே இருந்தது? அதே போலத்தான், இப்பொருள்களின் உட்கலந்தே இறைவன் இருக்கிறான். பிரகலாதன், "நான்
பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/234
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை