பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 239 இவற்றைக் கடந்தவன் என்பதும், 'உள்' என்பதால் அந்தர்யாமியாய் இவற்றின் உள்ளே உள்ளான் என்பதும் இந்நாட்டவர் கண்ட கொள்கை திடவி சும்பு, எரி, வளி, நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவை அவைதொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளான் x (நாலாயிரம்-2088) என்பது நம்மாழ்வார் அருளிப்பாடு. எனவே, கம்பநாடன் காலம் நீத்தவன்' என்று கூறுவது முற்றிலும் பொருத்தமே. இறைவனை காலாதிதன் காலங்கடந்தவன்) என்று கூறுவதும் மரபு. இதில் கணக்கும் நீத்த என்பதும் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். அவன் ஒருவனைத் தவிர எண்ணுதற்கு இரண்டாவதாக ஒன்று இருந்தால்தானே, இரண்டு மூன்று என்று கணக்கிட வேண்டிய தொல்லை நேரும். ஏகம் சத்' என்று வேதம் கூறுவதை இந்நாட்டவரும் கூறியுள்ளனர். ஒன்று நீ அல்லை; அன்றி ஒன்று இல்லை * . . . (திருவாசகம்-கோயில்-7) எந்த ஒன்றையும் எடுத்துக்கொண்டு நீ இதுவா என்றால் இது அல்ல (ஒன்று நீ அல்லை என்றுதான் கூறவேண்டியுளது. ஆனால் உனையன்றி இரண்டாவதாக எண்ணக்கூடிய பொருள் எதுவும் இல்லை (அன்றி ஒன்று இல்லை). எனவே கணக்கிடுவதற்கு எதுவும் இல்லை. கணக்கை நீத்த (கடந்த காரணன் என்று கவிஞன் பேசுவது, எத்துணைப் பொருத்தம் உடையது என்பதை அறிய வியப்பாக இருக்கிறது! - ஒரே சொல்லால் குறித்தல் இனி உடன்பாட்டு முகமாகப் பரம்பொருளை ஒரு சொல்கொண்டு குறிக்கத் தொடங்குகிறான் கவிஞன், எந்த ஒரு சொல்லைச் சொல்வதன்மூலம் அனைத்தையும்