பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 + கம்பன் - புதிய u៣ចំណាំៈ இவ்வாறு இராகவன் சொல்ல வேண்டும் என்பது தான் மாருதியின் விருப்பம், சொல்லின் செல்வனாகிய அனுமன் தன் பேச்சாற்றலால் இதனைச் செய்து முடித்து விடுகிறான். - - - சுக்ரீவன் ஐயம் இவ்வளவு தூரம் இராமன் கூறியும் சுக்ரீவனுடைய மனத்தில் நிறைந்துள்ள ஐயம் நீங்கினபாடில்லை. எனவே, சுக்ரீவன் தன் அமைச்சர்களைத் தனியே அழைத்துச் சென்று ஆலோசனை நடத்துகிறான். அவன் மனத்தில் உள்ள ஐயத்தைப் புரிந்துகொண்ட மாருதி பேசத் தொடங்குகிறான். அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஒர் ஆற்றல் இன்ன வீரர்பால் இல்லை என்று அயிர்த்தான். (73) (அயிர்த்தல்-சந்தேகித்தல்.) இதனை உணர்ந்து "ஐயா! அவன் கைகளிலும், கால்களிலும் சங்கு சக்கரக் குறிகள் உள. இந்த இராமன் அத்திருநெடுமாலே! அறம் நிறுத்தற்கு ஈண்டும் பிறந்தனன். என்னைப் பெற்றவன். உலகைப் படைத்த நான்முகனைப் பெற்றவனாகிய திருமாலுக்கு அடிமை செய்; அதுவே உனக்குத் தவம்; அதுவே உன்னைப் பெற்ற எனக்கும் நலம் என்று உரைத்தான். நான் யாவர்க்கும் துன்பம் தோன்றும் பொழுது உடன் தோன்றுபவனாகவும், யாவருக்கும் முன்பு உள்ளவனாகவும் உள்ள அவனை அறிதற்கு வழி யாது? என்று கேட்டேன். அன்பே சான்றாகும் என்று என் தந்தை கூறினான். இராமனைக் கண்டபொழுது என் உடம்பில் எலும்பே இல்லாததுபோல் உருகிற்று! வேறு என்ன வேண்டும்?" என்ற பொருளில் அனுமன் கூறுகிறான். சங்கு சக்கரக்குறி உள, தடக்கையில், தாளில் به این تیم به د*۶ ه . * a = s به a یا a به م = a به