பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 105'. அவன் ஒருப்படவில்லை. எனவேதான், கர, துடணர்கள் வலுச்சண்டைக்கு வந்து அழிகின்றனர். - இந்தப் படலத்தை இத்துணை விரிவாக 192 பாடல்களில் பாட வேண்டிய இன்றியமையாமை என்ன ? இப்போர் மூன்று நாழிகையுள் முடிந்தது என்று சூர்ப்பணகையே கூறுகிறாள். "வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில்" (3130) என்று அவளே கூறியிருக்க, இதனைக் கூற இத்தனை பாடல்களைக் கம்பன் ஏன் பயன்படுத்துகிறான்? சற்று ஆய்ந்தால், இதன் காரணத்தை அறிய முடியும். காப்பியத்தின் பாதியை யுத்த காண்டம் என்ற பெயரில் படைக்கப் போகும் கவிஞன், அதற்கு முன்னர்ப் போட்டுக்கொண்ட சிறிய வரைபடம் ஆகும் இது. இரண்டாவது திருப்புமுனை யாகிய சூர்ப்பணகை சூழ்ச்சி ஒரு படலமாக விரிகின்றது. அடுத்து, மாபெரும் இராவணன் தான் பெற்றிருந்த மிக உயர்ந்த நிலையிலிருந்து கீழே விழுவதற்கு எடுத்துக்கொண்ட முதற்படியாவது இராவணன் சூழ்ச்சிப் படலமாகும். இதிலொரு வியப்பு என்னவெனின், அண்ணன் தங்கை என்ற இருவருடைய சூழ்ச்சியும் கேவலமான காமத்தை அடிப்படையாகக் கொண்டதே யாகும். இக்காண்டத்தின் தொடக்கத்திலுள்ள விராதன் வதையும், சரபங்கன் பிறப்பு நீங்குதலும் காப்பிய வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் துணை செய்யவில்லை. பின்னர் இவற்றை முறையே 70, 44 பாடல்களிலும் பாட வேண்டிய இன்றியமையாமை யாது? இராமனை இன்னார் என இனங் கண்டுகொண்டு, இறைத் தன்மையை விரித்துப் பாட முதலிரண்டு காண்டங்களிலும் இடம் இல்லை. பரம்பொருள் எதன்பொருட்டு இவ்வுலகிடைத் தோன்றின்ானோ அப்பெருங் காரியத்தைச் செய்வதற்குப் புறப்பட்டு விட்டான். இந்நிலையில் நாமேகூட இராமனின் உண்மையான சொரூபத்தை மறந்து, அவன் அழகிலும், அவனுடைய அன்பிலும், எளிவந்த தன்மையிலும் மயங்கிவிடுகிறோம். நம் அன்பில் அகப்பட்டுக்கொண்ட தோழனாக நினைத்து விடுகிறோம். மணிவாசகப் பெருமான் கூறியபடி “மழக் கை இலங்கு பொற்கிண்ணம் என்றலால் அரியை என்று உனைக்