பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 . கம்பன் எடுத்த முத்துக்கள் தேவர் பாடிய சிந்தாமணியில் போருக்கு நிரம்பச் சந்தர்ப்பம் உண்டென்றாலும் சச்சந்தன் செய்த போரையோ, இறுதியில் சீவகன் செய்த போரையோ தேவர் விரிவாகப் பாடவில்லை. அன்பு நெறி, உயிர்கள்மாட்டு இரக்கம், துறவு, தவம் ஆகியவற்றிற்கே முதலிடம் தரும் சமண சமயத்தின் ஈடு இணையற்ற காப்பியமாகிய சிந்தாமணியில் போர் பற்றி விரிவாகப் பாடத் தேவர் பெருமான் விரும்பவில்லை. பின்னே வருகின்ற பெரிய புராணத்திலும் இதற்கு வாய்ப்பே இல்லை. எஞ்சியுள்ளது கம்பனது இராமகாதைதான். தனக்கு முன்னும் பின்னும் எந்தக் காப்பியத்திலும் காணப்பெறாத போர் பற்றிப் பாடுவதற்கு இக் கவிச்சக்கரவர்த்திக்குத் தமிழிலக்கியத்தில் முன்னோடி யாருமில்லை. முதல் நூலாகிய வான்மீகத்தில் இது விரிவாக உள்ளது. எனவே, கம்பநாடன் அரிதின் முயன்று ஒரு காண்டம் முழுவதும் போர் பற்றிப் பாட முடிவு செய்துவிட்டான். அக்காலத்தில் போர்கள் இரண்டு வகையாகச் செய்யப்பெற்றன. முதலாவது வகை, பகை என்றவுடன் தன்வலி, துணை வலி ஆகிய அனைத்தையும், ஒன்று திரட்டி முழுமூச்சாகச் சென்று போரிடுவதாகும். இரண்டாவது வகை, போர் என்று வந்தவுடன் அமைச்சர்கள், அறிஞர்கள், ஆகியோரைக் கூட்டித் தன்வலி, துணைவலி என்பவற்றோடு மாற்றான் வலிமையையும் ஒப்பிட்டு எவ்விடத்தில் எப்பொழுது, எவ்வாறு போர்புரிய வேண்டும் - பகை தம்மைத் தாக்குகின்றவரை பொறுத்துப் போரிடுவதா அல்லது பகை மேற்சென்று போரிடுவதா என்றெல்லாம் தக்காரோடு கூடி ஆய்ந்து பின்னர்ப் போரிடுவதாகும். கம்பநாடனைப் பொறுத்தவரை இந்த இருவகையையும் கையாள்கிறான். கர துடணர் போர் முதல் வகையைச் சேர்ந்தது. இராவணனது போர் இரண்டாவது வகையைச் சார்ந்தது ஆகும். சூர்ப்பணகை சொல்லியவுடன் பகைவர் யார் எவர் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், படை முழுவதையும் ஒருசேரத் திரட்டிக் கொண்டு சென்று போர் தொடங்க ஆயத்தமானான். படைத்தலைவர் துTடணன், திரிசிரா ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்று மடிய