பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f88 கம்பன் எடுத்த முத்துக்கள் -ஆற்றற்கு ஏற்ற சேண் உயர் பெருமைதன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன்; - பின்னர்க் காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி (3769) என்ற பாடலை அமைக்கிறான் கவிஞன். இதற்கு முந்தைய பாடலில் இலக்குவனைப் பார்த்து இராகவன் வில்லார் தோள் இளைய விர!” என விளிப்பது கருத்துடை அடை கொண்ட விளியாகும். போருக்கு உரிய எவ்வித நிகழ்ச்சியும் நடைபெறாத இந்த நேரத்தில் வில் ஆர் தோள்' என்று விளிப்பது ஒரு காரணம்பற்றியே ஆகும். எதிரே உள்ளவனைக் கூர்ந்து பார்த்து அவன் யாரென்பதை எடை போட முயலாமல் ஏதோவொரு பிரமச்சாரி வடிவம் என்று அலட்சியமாக நிற்பதும், அவன் தமையன் விரிஞ்சனோ விடைவலானோ? என்று கூறியபோதும் அதுபற்றிச் சிந்திக்காமல் இருப்பதும் இராகவனுக்குத் தம்பியினிடம் ஏமாற்றத்தை உண்டாக்குகிறது. மறைமுகமாக அவனை இடித்து அறிவு புகட்ட விரும்பிய பெருமான் வில்லையும் புயத்தையும் மட்டும் நம்பிக்கொண்டு அனுபவத்தால் பெறவேண்டிய அறிவை இளமை காரணமாகப் பெற முயலாமல் தன் வீரத்தைமட்டுமே நம்பி வாழ்கின்றவனே என்று பொருள் பொதிந்த அடைமொழி களால் இளவலை விளித்துப் பேசுகிறான் இராகவன். இவ்வளவு சொல்லியும் இலக்குவன் மனத்தில் ஏதும் மாற்றம் இல்லை ஆதலால், அடுத்த பாடலில் இடித்துப் பேசுகிறான். 'கழறி என்றால் இடித்துச் சொல்லி என்று பொருள்படும். 'இப்பொழுது புரியவில்லையாயினும் நான் சொல்வது உண்மையென்பதைப் பின்னர்க் காண் பாய்' என்று பேசுகிறான் இராமபிரான். கண்டமாத்திரத்திலேயே ஒருவரை யொருவர் நன்கு புரிந்துகொண்டனர். தன்னை மீளா நெறிக்குச் செலுத்தும் பரம்பொருள்தான் மானுட வடிவம் தாங்கிவந்தது என்பதை அறிந்த அந்த விநாடியிலேயே யான் எனது என்ற அகங்கார மமகாரங்களையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றையும்