பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கம்பன் எடுத்த முத்துக்கள் படிப்போருக்கு அலுப்புத்தட்டுதல் இயல்பே. ஆனால், கம்பநாடன் புதிய புதிய யுக்திகளைக் கையாள்வதால், போரைப்பற்றிப் பாடும்பொழுதுகூடப் படிப்போருக்கு அலுப்புத் தட்டுவதில்லை. இதுபற்றி விரிவாய் பேசுவதற்கு இது இடமில்லை. என்றாலும், போர்க்களச் செய்திகள் என்று கம்பன் காட்டும் சிலவற்றைக் காண்பது பொருத்தமுடையதாகும். ஆரணிய காண்டத்தில் கரனுடன் நடைபெறும் போரும், சுந்தர காண்டத்தில் அதிகாயன், அக்க குமாரன், படைத்தலைவன், இந்திரசித்தன் ஆகியோருடன் அனுமன் நடத்திய போரும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. கர துடனர்களுடன் ஆரண்யத்தில் இராமன் செய்த போர் வெட்ட வெளியில் நடைபெற்றதாகும். கோட்டை, கொத்தளம் முதலிய எதுவும் அங்கில்லை. அதே போல, சுந்தர காண்டத்தில் அனுமன் செய்த போர்களும், அசோக வனத்தை அடுத்த வெட்ட வெளியில் நடந்தவையே ஆகும். வெட்டவெளியில் நடைபெறுகின்ற போருக்கும், ஒரு கோட்டையை முற்றுகையிட்டு நடைபெறும் போருக்கும் சில வேறுபாடுகள் உண்டு. இதனை மனத்தில் வாங்க் கிகொண்ட கம்பன், இலங்கைப் (3ւ որ rr தொடங்குவதற்கு முன்னர் இரண்டு பக்கத்தாராலும் படைகள் எவ்வாறு அணிவகுத்து நிறுத்தப் பெற்றன என்பதை விரிவாகக் கூறுகிறான். இத்தகைய போர்களில் கோட்டையைச் சுற்றி நான்கு புறங்களிலும் நான்கு பெருவாயில்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வாயிலின் உள்ளே இருப்பவர் வாயிலின்வழி பகைவர்கள் படைகள் உள்ளே நுழைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதுடன், தங்கள் படைகள் கோட்டைக்கு வெளியே சென்று போர் புரியவும் உதவுகின்றனர். வெளியே உள்ள படைகள், உள்ளே இருந்துவரும் படைகளை வெல்லவும், வாய்ப்பு நேர்ந்தபொழுது கோட்டையினுள்ளே புகவும் ஆயத்தமாக இருப்பர். g c : இதனை மனத்தில் கொண்டு ஒவ்வொரு வாயிலின் ளேயும், வெளியேயும் யார் யார் நிற்கின்றார்கள், அவர்கள்