பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 31 திணைப் பிரிவு செய்த ஆசிரியர் தொல்காப்பியர், "தெய்வம், உணாவே, மா, மரம் புள், பறை (அகத்திணை இயல் 18 முதலானவற்றைக் கருப்பொருள் என்ற தலைப்பில் கூறிச் சென்றுள்ளார். எனவே, தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நில வருணனை என்பது மிக விரிந்த நிலையில் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. உதிரியான சங்கப் பாடல்களில் இடம் பெறாமல் நீண்டிருக்கின்ற மதுரைக் காஞ்சி, பட்டினப் பாலை, ஆற்றுப் படைகள் ஆகியவற்றுள் காணப்பெறும் நாட்டு (நில) வருணனைகளும், நகர வருணனைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை ஆகும். இந்த வளர்ச்சி காப்பிய வடிவு பெற்ற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் தனிப்பட்ட முறையில் ஏனோ இடம் பெறவில்லை. மதுரை, காவிரிப்பூம்பட்டினம் என்ற இரண்டு நகரங்களில் வாழும் மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை முறையை விரிவாகப் பாடும் சிலம்பு பாண்டிய நாடு, சோழ நாடு என்ற அடிப்படையில் பொதுவாகப் பேசவில்லை. இவ்விரு காப்பியங்களை அடுத்துத் தோன்றிய உதயணன் கதையில் (பெருங்கதை தனியாக இவ் வருணனைகள் பாடப் பட்டிருந்தனவா, இல்லையா என்று அறிய வாய்ப்பில்லாமல், காப்பியத்தின் முற்பகுதி கிடைக்கவில்ல்ை, இதனை அடுத்துத் தோன்றியவை பக்தி இயக்கக் காலப் பாடல்கள். அவற்றுள் இந்த வருணனைகளை எதிர்பார்த்தல் நியாயமில்லை, என்றாலும், மலை வருணனை, மருத நில மக்கள் வருணனை என்பவைபற்றி ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றன திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள். சங்க இலக்கியங்களில் துளையமாடிய கம்பநாடன், நாட்டையும் மக்களையும் தனித்தனியே வருணிக்க வேண்டும் என்ற புதுமையை முதன்முதலில் புகுத்துகிறான். மன்னராட்சி நன்கு வளர்ந்து செம்மைப்பட்ட நிலையில் கம்பன் தோன்றியவன்; ஆதலின், கோசல நாட்டையும்