பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 7; செயலாற்றுகின்றாள். இவ்வாறு செய்வதனால் கணவன் உயிர் போய்விடும் என்று முதலில் அவள் நினையாமல் இருந்திருக்கலாம். ஆனால், கணவன் அதை எடுத்துக் காட்டிய பிறகு, கணவனுடைய உயிரா அல்லது அவன் பழிக்கு ஆளாகாமல் இருப்பதா? என்ற ஒரு வினா கைகேயியின் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். தசரதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவன். இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதில் அவனுக்கு எந்த விதமான சிறப்பும், பெருமையும் இருக்கப்போவ தில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும், அவன் இராமனுக்குப் பட்டம் கட்டிவிட்டு உயிர்துறப்பானேயானால் வார்த்தை தவறிய பெரும் பழி அவனைச் சூழத்தான் செய்யும். இந்தப் பழியிலிருந்து நீங்கவேண்டு மானால், அவன் உயிர் போவதாக இருந்தாலும் சரி அதைப்பற்றிக் கவலையில்லை. இந்தப் பழி பாவங்கள் அவனை அடையா திருத்தல் வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கைகேயி செயல்பட்டாள் என்று நினைக்கவேண்டி யிருக்கிறது. ஆகையினால்தான், தசரதன் எவ்வளவு எடுத்துக் கூறியும் வசிட்டன் வந்து கூறியும் - கோசலை வந்து அழுதும் . கைகேயி எதற்கும் அசையாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டோடு நின்றுவிட்டாள். ஆகவே, இந்த அடிப் படையை வைத்துக்கொண்டு பார்ப்போமேயானால் கைகேயி செய்த தியாகம் மாபெரும் தியாகமாகும். இந்த மாபெரும் தியாகத்தில் தன்னைச் சூடமாக ஆக்கி எரித்துக் கொண்டு, கணவனைக் காப்பாற்றுகின்றாள் என்று நினைக்கத் தோன்றுகிறது. கைகேயி இவ்வாறு நினைந்துதான், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இந்த முடிவிற்கு வந்து கணவனைக் காப்பாற்று வதற்காகத் தன்னையே சர்வ பரித்தியாகம் செய்து கொண்டாள் என்ற முடிவுக்கு அரண் செய்கின்ற முறையில் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமைகின்றன. பரதன் வருகிறான். தாயிடம் பேசுகிறான், தந்தை வானத்தான். அண்ணன் கானத்தான் என்று அவள்