பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோசிரியர்.அசஞானசம்பந்தன் 73 சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் பரதனோ, கோசலையோ யாருமே அவளைக் குற்றம் சொல்வதற்கில்லை. அந்த நிலையில், அவள் ஏன் அதனைச் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கக் கூடாது' என்று நினைக்கும்பொழுதுதான் அவளுடைய பெருமை நமக்குத் தெற்றென விளங்குகிறது. இத்துணையும் மனத்திற் கொண்ட கம்பநாடன் கணவன் வருவதற்கு முன்னர் அணிகளைப் பறித்து எறிந்துவிட்டுக் கீழே கிடக்கும் கைகேயியை அறிமுகம் செய்யும்பொழுது "நாடக மயில் துயின்றென்ன" (1494 என்று பேசுகிறான். நாடக மயில் என்று கூறியது விரிவாக ஆயப்படவேண்டிய பகுதியாகும். அரசியர் மூவர் என்ற என் தனி நூலில் இது பேசப்பெற்றுள்ளது. இதனை அவள் சொல்லியிருப்பாளேயானால் தன் பழியிலிருந்து விலகிக்கொள்ளலாமே தவிர, தசரதனுடைய புகழ் மங்கியிருக்கும். அந்த நிலை வரக்கூடாது என்பதற்காகத் தான் கைகேயி இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்தாள். வாய் திறந்து, வேண்டுமென்றேதான் செய்தேன். இதனை நான் செய்யாமல் இருந்திருப்பேனேயானால் தசரதன் வாய்மையும், மரபும் காத்தவனாக இருந்திருக்க மாட்டான்' என்று சொல்லியிருப்பாளேயானால் மறுபடியும் தசரதனுக்குப் பழி ஏற்பட வழிசெய்தவள் ஆகிவிடுவாள். ஒரு கடுகளவு கூடக் கணவனுக்குப் பழி வராத முறையில் அவனைப் பாதுகாத்து, அதன் விளைவாகத் தன்னையே தியாகம் செய்துகொண்டு வாய் திறவாமல் கடைசிவரை இருந்த பாத்திரமாக அமைகின்றாள் கைகேயி இவளுடைய இந்த மாபெரும் தியாகத்தைப் பரதன் உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் அறிந்துகொள்ள வில்லை. ஏனையோரைப் பற்றிக் கவலையேயில்லை. ஆனால், இராகவனைப் பொறுத்த மட்டில் நன்கு அறிந்திருந்தான் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. -...' . . . இராகவனைப் பிள்ளையாகப் பெற்றுங்கூட, தசரதன் வீடுபேற்றை அடையக்கூடிய நிலையைப் பெறவில்லை. தேவர் உலகத்தில்தான் சென்று தங்குகின்றான். இராகவன் கானகம்