பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusй – “РФ «Qрятшй интiзов» –ost costofkилғайт 528 “பனிமலர்த்தவிசின் மேலோன் பார்ப்பன குல த்துக்கெல்லாம் தனிமுதல் தலைவன் ஆனாய், உன்னைவந்து அமரர் தாழ்வார், மனிதருக்கு அடிமையாய்நீ இராவணன் செல்வம் ஆள்வாய் இனிஉனக்கு என்னோமானம்? எங்களோடு வடங்கிற்று அன்றே?” "எழுதி ஏர்அணிந்ததிண் தோள் இராவணன் இராமன் அம்பால் புழுதியே பாயல் ஆகப் புரண்டநாள், புரண்டு மேல் வீழ்ந்து அழுதியோ! நீயும்கூட ஆர்த்தியயோ! அவனை வாழ்த்தித் தொழுதியோ! யாதோ செய்யத் துணிந்தனை விசயத் தோளாய்?" “ஊன்உடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர் வந்து எய்தும் மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே! நீயும் அன்னான் தான் உடைச் செல்வம் துய்க்கத் தகுதியே! சரத்தினோடும் வானிடைப்புகுதி அன்றே! யான்பழி மறுக்கில்! என்றான்.” உன் கையில் வலிமை மிக்க தண்டாயுதத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய். இருப்பினும் நீ மானமில்லாது, குலம் தாழ்ந்து போய் எதிரிகளுக்கு அடிதொழுது அவர்களுக்குப் பின்னால் கைகட்டிச் சென்று கொண்டிருக்கிறாய். சாதி விலக்கு செய்யப்பட்ட வனைப்போல எதிரிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறாய். மேளம் கொட்டுவதைப் போலத் திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கொண் திரிகிறாய். உன் தலையை உருட்டுகிறேன்