பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ыйшейт — бРФ әсрәлили штвови —ғу запатетейт |06 கூட்டமாம் அரக்கர் தம்மைக் கொன்று உங்கை கொங்கை மூக்கும் வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை கேட்டும் இம்மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி யன்றோ?” என்று தன்னை மாயம் செய்து தூக்கிக் கொண்டு போவது அம்மானிடரைக் கண்டு பயந்தல்லவா? என்று சீதை கேட்டாள் அப்போது இராவணன் “மொழி தரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை இழி தரு மனித ரோடேயான் செரு இழைப் --- பேன் எள்றால் விழி தரு நெற்றியான் தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்குப் பழிதரும் அதனில் சாலப்பயன் தரும் வஞ்சம் என்றான்.” “இந்த இழிவான மனிதருடன் நான் போர் செய்தால், வெள்ளி மலையைத் துாக்கிய எனது தோள்களுக்குக் கேவலமாகும். அதனால் இந்த வஞ்சம் பொருத்தமானதேயாகும்” என்று இராவணன் தனது பழம் பெருமையைப் பேசி மனிதரைப் பற்றிய இழிவாகக் கூறுவதைக் கம்பன் காட்டுகிறார். சீதையைத் துக்கிச் செல்லும் இராவணனை இடைமறித்துத் தடுத்து சடாயு கூறுவது, “முத்தேவரின் மூல முதற் பொருளாம் அத்தேவர் இம்மானிடர் ஆதலினால் எத்தேவரொடு எண்ணுவது எண்ணம் இலாய் பித்தேறினை யாதல் பிழைத்தனையால்”