பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 242 பெறுகிறது. அயோத்தியும் கிட்கிந்தையும் ஒரு புதிய சகோதர உறவு நிலைக்கு உயர்ந்து விட்டது. இலங்கை சகோதரர்கள் இலங்கை சகோதரர்கள் மூவர். எவருக்கும் அஞ்சாத வல்லமையும், பேராண்மையும், கம்பனுடைய வார்த்தைகளில் முக்கோடி வாழ் நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும் கொண்ட நிகரில்லாத மாவீரன் இராவணன் இலங்கை சகோதரர்களில் மூத்தவன். அவன் இலங்கையின் தன்னேரில்லாத் தலைவன். அந்த இராவணப் பெயரான் சிறந்த சிவ பக்தன். இசையில் வல்லவன், ஈடு இணையற்ற இசைமேதை. “இந்திரற்கு இந்திரன், எழுதல் ஆகலாச் சுந்தரன், நான் முகன் மரபில் தோன்றினான், அந்தரத்தோடும் எவ்வுலகும் ஆள்கின்றான் - மந்திரத்து அருமறை வைகும் நாவினான்” சென் ஆண்டிருந்தபேர் இலங்குமால் வரை ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் ஆசைகள் சுமந்த பேர் அமரி யானைகள் பூசல் செய் மருப்பினைப் பொடி செய் தோளினான்” Tதாள் உடை மலர் உளான் தந்த அந்தம் இல் நாள் உடை வாழ்க்கையன், நாரிபாகத்தன் வாள் உடைத் தடக்கையன் வாரி வைத்த வெம், தோள் உடை ச்சிறையினன் குணங்கள் மேன்மையான்,” "ഖെങഥ தீர் ஒழுக்கினன், விரிந்த கேள்வியன் செம்மை யோன், மன்மதன் திகைக்கும் செவ்வியன் எம்மஇேனார் அனைவரும் இறைவன் என்று எனும், மும்மை யோர் பெருமையும் முற்றும் பெற்றியான்”