28✽கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்
என்பது உணரத்தக்கது. இன்னமும் கம்பனின் இலட்சியம் நிறைவேறவில்லை. கம்பனின் ஆர்வலர்கள்-மனிதநேயம் உடையவர்கள்—கம்பனின் இலட்சியத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
கம்பன் கோசல நாட்டில், பெண்கள் மதிக்கும் சமூக அமைப்பு இருந்ததாகப் பாடுகிறான். ஆனால் மீட்சிப்படலத்தில் சீதையை இராமன் கண்டபடி திட்டுகிறான்.
- “ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம்: பாழ்பட
- மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மாநகர்
- ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
- மீண்டது என் நினைவு, எனை விரும்பும் என்பதோ?” (கம்பன்-10013)
- “யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
- சேதியா நின்றது உன் ஒழுக்கச் செய்தியால்
- சாதியால்; அன்று எனின் தக்கது ஓர் நெறி
- போதியால் என்றனன்–புலவர் புந்தியான்” (கம்பன்-10019)
என்றெல்லாம் இராமன் திட்டுகின்றான். இதில் என்ன நியாயம் இருக்கிறது? அறிஞர்களில் சிலர் சமாதானம் கூறுகின்றனர். நாடாளும் அரசனாக இருந்தால் சொல்லினால் சுடும் உரிமை உண்டா? நெருப்பினால் சுட்டதை வேண்டுமானால் நியாயப்படுத்தலாம். நாவினால் சுட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதனால் பெண்களைப் பெருமைப்படுத்தும் ஒழுக்கம் அயோத்தியில் இருந்ததா என்பதே கேள்விக் குறியாகிவிட்டது.
ஆக, அயோத்திப் பேரரசு நிறைகளும் குறைகளும் உள்ள அரசாகவே விளங்கியுள்ளது என்று அறிகின்றோம்.