பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்41


“அந்தணன், உலகம் மூன்றும்
ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன், அன்புக்கு ஆன்ற
தவசெறி உணர்ந்து, தக்கோய் !
இந்திரன் கருமம் ஆற்றும்
இறைவன் நீ; “இயம்பு தூது
வந்தனென்” என்ற பின்னும்
கோறியோ, மறைகள் வல்லோய்!”

(கம்பன் - 5916)

என்பது வீடணன் அறிவுரை.

இலங்கைக்கு அனுமன் வந்து போனபின், இராவணன் தனது மந்திரி சபையைக் கூட்டி ஆலோசனை செய்கின்றான். மந்திரிசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கும்பகருணன் இராவணன் செய்கையை மறுக்கின்றான்; கண்டிக்கின்றான்.


ஆக இல் பர தாரம்.அவை அம் சிறை அடைப் பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம், வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்!

(கம்பன்-6122)

இப்பாடலில் கும்பகருணன் ‘குற்றமற்ற பிறருடைய மனைவியைச் சிறையில் வைப்பது நல்லரசுக்குரிய நடைமுறையன்று, காமமும் மானமும் ஓரிடத்தில் இருத்தல் இயலாது’ என்றெல்லாம் கடிந்து கூறுகின்றான். ஆதலால், திருக்குறள் அரசியலில் கூறுவதுபோல, மடவார் கற்புக்கு அரசு காவலாக விளங்க வேண்டும். அங்ஙனம் இன்றி ஆள்வோரே மற்றவர் மனைவியைச் சிறையில் வைப்பாராயின் அவ்வரசு எங்ஙனம் நல்லரசாக விளங்க முடியும்? என்பது கும்பகருணன் வினா.