பக்கம்:கம்பன் கலை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரணில் முழுமுதல் 9 183 வினையைச் செய்துவந்ததால் ஏற்படும் பயனைத் தருபவனல்லன் முழுமுதலாகிய ஒருவன் என்பதையும் கவிஞன் குறிக்கிறான். ஏனையோர் வருதலாகிய வினையைச் செய்தாலொழிய வந்த பயனைத் தரவியலாது. ஆனால், இறைவன் வினை செய்யாமலே வினையின் பயனைத் தருகிறான் என்ற உயர்ந்த கருத்தும் இதில் அடங்கி நிற்கின்றது. இதனையே மாணிக்கவாசகர் "விச்சது (விதை) இன்றியே விளைவு செய்குவாய்” என்கிறார். முரண்பாட்டில் முழுமுதலைக் கண்ட தமிழன் வாழ்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/194&oldid=770711" இலிருந்து மீள்விக்கப்பட்டது