பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83



ரை செய்த அளவில் அவன்
         முக நோக்கி
         உள்ளத்தில் ஒருவராலும்
கரை செய்ய அரிய தொரு
         பேர் உவகைக்
         கடல் பெருகக் கரங்கள் கூப்பி
‘அரசு எய்தி இருந்த பயன்
         எய்தினன் மற்று
         இனிச் செய்வது அருள்க’ என்று
முரசு எய்து கடைத் தலையான்
         முன் மொழியப்
         பின் மொழியும் முனிவன் ஆங்கே

இவ்வாறு முனிவர் கூறிய உடனே அளவிடற்கரிய மகிழ்ச்சியுற்றான் அரசன். தன் இரு கைகளையும் குவித்துக் கொண்டான். முனிவரை நோக்கினான் ‘நான் அரசு பெற்ற பயனை இன்றே அடைந்தேன். இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று அருள்க’ என்றான்.

விசுவாமித்திர முனிவரும் பின் வருமாறு கூறினார்.

𝑥𝑥𝑥𝑥

உரை செய்த அளவில்—முனிவர் இவ்வாறு கூறிய உடனே; முரசு எய்து–முரசங்கள் முழங்குகின்ற; கடைத் தலையான்–தலைவாயிலை உடைய தசரதன்; உள்ளத்தில்—தன் உள்ளத்திலே; ஒருவராலும் கரை செய்ய அரியது—ஒருவராலும் அளவிட்டுக் கூற இயலாத; ஒரு பேர் உவகைக் கடல் பெருக–பெரிய மகிழ்ச்சியாகிய கடல் பொங்க; அவன் முகம் நோக்கி—அந்த முனிவனை நோக்கி; கரங்கள் குவித்து—