88
முனிவர் முன் சென்றார். அரச குமாரர் இருவரும் வில் ஏந்தியவராகப்பின் சென்றனர்.
𝑥𝑥𝑥𝑥
வென்றி வாள் புடை
விசித்து மெய்மை போல்
என்றும் தேய்வுறாத்
தூணி யாத்து இரு
குன்றம் போன்று உயர்
தோளில் கொற்றவில்
ஒன்று தாங்கினான்;
உலகந் தாங்கினான்
உலகத்தைக் காக்கும் திருமாலின் அம்சமாக அவதரித்து இராமன் தனது இடது பக்கத்திலே வாளைக் கட்டினான்; தோள்களிலே அம்புப் பெட்டியைக் கட்டினான். வெற்றி தரும் வில்லை இடது கையிலே பிடித்தான்.
𝑥𝑥𝑥𝑥
உலகம் தாங்கினான்-உலகம் தாங்கும் திருமாலின் அம்சமாக அவதரித்த இராமன்; வென்றி வாள்—வெற்றிக்குரிய வாளை; புடை விசித்து—இடது பக்கத்திலே கட்டி; இரு குன்றம் போன்று—இரண்டு குன்றுகள் போல; உயர் தோளில்—உயர்ந்துள்ள தனது இரு தோள்களிலே; மெய்ம்மை போல—சத்தியமான தருமத்தைப் போல; என்றும் தேய்வு உறா—எந்த நாளிலும் குறைவு படாத; தூணி யாத்து—அம்புப்பட்டியலைக் கட்டி கொற்றம் வில் ஒன்று தாங்கினான்—வெற்றி தரும் வில் ஒன்றையும் இடக்கையிலே பிடித்தவனாகி
𝑥𝑥𝑥𝑥