பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38



வன்மை தரித்தோர் மானிடர்
        மற்று அங்கு அவர் வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும்
        நிலை நேர்ந்தால்
என் மரபுக்கும் நின் மரபுக்கும்
        இதன் மேல் ஓர்
புன்மை தெரிப்பின் வேறு இனி
        மற்று என்? புகழ் வேலோய்
.

புகழ் மிக்க வேல் கொண்ட மாமனே! மானிடர் பலம் பெற்று விட்டனர்; தண்டகாரண்யத்திலே அவர்தம் வாளால் மூக்கினை இழக்கும் நிலை உனது மருகியாகிய சூர்ப்பணகைக்கு நேர்ந்தது. நின் குலத்துக்கும் என் குலத்துக்கும் இதை விட இழிவு வேறு என்ன வேண்டும்? என்று தூபம் போட்டான் இராவணன்.

புகழ் வேலோய் - புகழ் மிக்க வேலாயுதம் உடையோய்; மானிடர் - மனிதர்; வன்மை தரித்தோர் - பலம் பெற்று விட்டனர்; மற்று - மேலும்; அங்கு - தண்டகாரணியத்தில்; அவர் - அந்த மானிடர், வாளால் - தம் கை வாளினால்; நின் மருகிக்கும் - உனது மருமகளாகிய சூர்ப்பணகைக்கும்: நாசி இழக்கும் நிலை நேர்ந்தால் - மூக்கை இழக்கும்படியான ஒரு சூழ்நிலை உண்டானால்; என் மரபுக்கும் என் குலத்துக்கும்; நின் மரபுக்கும் - உன் குலத்துக்கும்; இதன் மேல் - இதற்கு மேலான ஓர் புன்மை தெரிப்பின் - ஓர் இழிவைக் கூறுமிடத்து; மற்று இனி வேறு என்? - இனிமேல் வேறு என்ன இருக்கிறது?