பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49



(அம்மொழி கேட்ட இராவணன் மாரீசனை நோக்கிச் சொல்கிறான்).

கங்கை சடை வைத்தவனோடும் - சடையிலே கங்கையை வைத்துள்ள சிவபெருமானோடும்; கயிலை வெற்பு - அவன் இருக்கும் கயிலாய மலையை ஓர் அம்கையில் எடுத்த- எனது ஓர் உள்ளங்கையிலே பெயர்த்து எடுத்து வைத்துக் கொண்ட எனது ஆடு எழில் மணித்தோள் - என்னுடைய போர் செய்ய வல்ல அழகிய சிறந்த தோள்கள்; இங்கு ஒரு மனிதனுக்கு இங்கே ஒர் அற்ப மனிதனுக்கு; எளிய என்றனை என - கீழ்ப்பட்டவை என்றாய் என்று; தன் வெம் கண் . தன் கொடிய கண்கள்; எரிய - கனல் கக்க; புருவம் மீதுற - புருவங்கள் மேல் நோக்கி நிற்க விடைத்தான் - கோபித்துரைத்தான்.


“நிகழ்ந்ததை நினைந்திலை என்
        நெஞ்சின் நிலை அஞ்சாது
இகழ்ந்தனை; எனக்கு இளைய
        நங்கை முகம் எங்கும்
அகழ்ந்தவரை ஒப்பு உற
        அமைந்தவரை ஐயா!
புகழ்ந்தனை; தனிப் பிழை
        பொறுத்தனன் இது” என்றான்.

“என்ன நடந்தது என்பதை நீ நினைத்துப் பார்க்கவில்லை. எனது மனநிலையை இகழ்ந்தாய் எனது தங்கையின் மூக்கை அறுத்த அந்த மானிடரை அஞ்சாது என்னிடமே புகழ்ந்து பேசுகிறாய். இது மாபெரும் பிழை; பொறுத்தேன்” என்றான் இராவணன்.